8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..! - Seithipunal
Seithipunal


8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை விவசாய நிலத்தை சுற்றி காண்பிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணையின் முடிவில் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் அபராத தொகையுடன் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years Jail For who raped 8 years old girl


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->