நள்ளிரவில் பயங்கரம்.. சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நள்ளிரவில் அதிவேகமாக சென்ற கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 person died in car accident in erode


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->