சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த கொடூரன்., முதியவர் உள்ளிட்ட ஐவர் கைது..! - Seithipunal
Seithipunal


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த முதியவர் உள்ளிட்ட ஐவரைகாவல்துறையினர் கைது செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம், எருமைவெட்டிபாளையத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இந்த செங்கல்சூளையில் 8 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தார். அந்த சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ பரவி வருவதாகாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து எருமைவெட்டிபாளையத்தை சேர்ந்த கண்னன் அந்த வீடியோவை பகிர்ந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரின் நண்பர்களான விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த பாலு என்ற முதியவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 person arrested in POCSO


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->