நேருக்கு நேர் மோதிய சொகுசு கார் - ஆம்னி பேருந்து.. சிறுமி உள்ளிட்ட 6 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதியதில் சிறுமி உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டம்பாறு  மேம்பாலத்தில் ஆம்னிகார் ஒன்று சென்டு கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து அந்த ஆம்னி கார் மீது  நேருக்கு நேர் மோதியது. ஆம்னி காரில் பயணித்த ஆத்தூரை சேர்ந்த ராஜேஷ்,சந்தியா,சரண்யா,ரம்யா ,சுகன்யா ,தன்ஷிகா (11) ஆகியோர் உயிரிழந்தனர்.

 

மேலும், படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஒட்டுநரின் கவன குறைவே விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 Members Death In Accident Near Selam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->