கண்டித்தும் அடங்காத கள்ளக்காதல்.. கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்.!
A Men murdered in Salem Illegal affair
சேலம் மாவட்டத்தில் உள்ள கும்பிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான சிவகுமார் என்பவர் காய்கறி வியாபாரி ஆவார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற 30 வயது பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் புஷ்பாவின் கணவர் தங்கராஜுக்கு தெரிய வர அவர் இருவரையும் அழைத்து கண்டித்து இருக்கின்றார். இதனை தொடர்ந்து, உறவினர்களும் சிவகுமாரை கண்டித்தனர். ஆனால் இந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி அவர்களது ரகசிய காதல் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 9-ல் சிவகுமார் தனது வீட்டுக்கு அருகில் நின்ற போது தங்கராஜும் அவருடைய தந்தை மாணிக்கமும் வந்துள்ளனர். அப்போது, சிவகுமாரிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சிவகுமாரை தங்கராஜ் தாக்கியுள்ளார்.
அப்பொழுது அடித்தாங்காமல் சிவகுமார் சுருண்டு விழ அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாணிக்கம் மற்றும் தங்கராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர்.
English Summary
A Men murdered in Salem Illegal affair