ஏரியில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


ஏரியில் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, குன்றத்தூர் நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவதன்று தனது நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்தார். நண்பர்கள் கூறியதால் நீச்சல் அடிக்க தண்ணீரில் இறங்கியுள்ளார்.

நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சித்த போது காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவரின் உடலை மீட்டனர். இந்த  சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy Drowns in to water


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->