பேசுவதை தவிர்த்த இளம்பெண், சைக்கோ காதலன் செய்த வெறிச்செயல்..!
boy friend arrested in Chennai
பேசுவதை நிறுத்தியதால் கல்லூரி மாணவி முகத்தில் வெட்டிய காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை , மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர்தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பிரசாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இது அந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவரை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து, பிரசாத்திடம் பேசுவதை மாணவி தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பிரசாத்எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய்? என கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவேதான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து மாணவி முகத்தில் கீறிவிட்டு தப்பி சென்றார்.
இதில், காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரசாத் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
English Summary
boy friend arrested in Chennai