சிறுமியின் ஆடைக்கு தீ வைத்து இளைஞர் செய்த கொடூர செயல்.. குண்டாசில் கைது.!
Boy sexual Harrasment for school girl
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அந்த வகையில், அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் பயந்து போன விஜயகுமார், காகிதத்தில் தீ வைத்து சிறுமியின் ஆடையில் பற்ற வைத்தார். இதில் சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சின்னமனூர் போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர், குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
English Summary
Boy sexual Harrasment for school girl