கானா கலர்க்குருவியின் காமுக பக்கம்.. ஏழ்மை சிறுமிகளை குறிவைத்து சீரழித்தது அம்பலம்.. விசாரணையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்திய காமுகன், அவர் கர்ப்பிணியானதும் கையை விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த கானா பாடல் புள்ளிங்கோ கானா திருமலையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னையில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கானா புள்ளிங்கோ திருமலை. இவனுக்கு திரு என்ற அடைமொழி வேறு. எழவு வீட்டில் கானா பாடல் பாடி, அதனை யூடியூபில் பதிவேற்றி வந்த திருமலை சிறுமிகளை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளான். மேலும், ஏழ்மை நிலையில் பள்ளியில் பயிலும் சிறுமிகள் தான் இவனது டார்கெட் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, திருமலை மீது புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயதான திருமலை, தன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து, குழந்தை பிறந்த நான்கு மாதங்களில் தன்னை கைவிட்டு சென்றதாகக் கூறியுள்ளார். 

இதனையடுத்து, திருமலையை பிடித்து விசாரணை செய்கையில், அவன் இளம் வயதுடைய சிறுமிகள் மற்றும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவிகளை குறிவைத்து, காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பிணியாக்கி கை விட்டு சென்றது வெளிச்சத்திற்கு வந்தது. 

மேலும், இவன் ஓட்டேரியில் உள்ள பகுதியில் இருக்கும் உணவகத்தில் பகுதி நேர பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், தனக்கு நன்கு தெரிந்த பதின்பருவ சிறுமிகளுக்கு தொடர்பு கொண்டு, தவறுதலாக தொடர்புகொண்டுவிட்டது போல பேச தொடங்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். பின்னர் உனது குரல் நன்றாக இருக்கிறது என்று பேச ஆரம்பித்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். 

இவனது பேச்சில் மயங்கும் சிறுமிகளை உன்னை பார்க்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி, சம்பந்தப்பட்ட சிறுமியை வரவழைத்து பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அச்சரப்பாக்கத்தில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து, குழந்தை பிறந்ததும் அவர்களை கழட்டி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளான். இதனைப் போன்று கொடுங்கையூர் சிறுமி, அயனாவரம் பகுதியைச் சார்ந்த ஏழ்மையான சிறுமி என பட்டியல் தொடர்ந்து கொண்டே இருந்த சென்றுள்ளது.

ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த சிறுமிகளையும் இவன் குறிவைத்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. திருமலையின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்த நிலையில், காதல் ரோமியோக்களை நம்பி வீட்டை விட்டு வெளியே சென்றால், சிறுமிகள் எந்த மாதிரியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Acharapakkam Gana Pullingow Arrest by Police Cheating girl Sexual Abuse


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->