#JustIN: மூளைச்சலவை செய்து கஞ்சா விற்பனை - சென்னை காவல்துறை பரபரப்பு பேட்டி.!!
Chennai Police arrest Kanja Supply gang
சென்னையில் மாணவர்களை குறித்து வைத்து, மூளைச்சலவை செய்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், பல அதிர்ச்சிகர தகவலாக, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து திரைப்பட பாணியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது அம்பலமானது. இதனையடுத்து விருகம்பாக்கம் காவல் துறையினர் கஞ்சா விற்பனை கும்பல் தலைவனை கைது செய்தனர்.
இந்த கைதிற்கு பின்னர் டி.நகர் துணை மாவட்ட காவல் ஆணையர் ஹரிதரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தற்போது கஞ்சா கும்பலை சார்ந்த 13 பேரை கைது செய்துள்ளோம். இக்கும்பலில் ஐசக் என்பவன் தலைவனாக இருந்து வந்துள்ளான். இவனையும் கைது செய்துள்ளோம்
இது தொடர்பான பல விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா கும்பல் எங்கிருந்து கஞ்சாவை கொண்டு வருகிறது என்பது முதல், எப்படி விற்பனை செய்கிறது என்று குறித்தும் முழு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா கடத்தலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் போன்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். முழு விசாரணைக்கு பின்னர் கட்டாயம் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Police arrest Kanja Supply gang