மாணவியின் செல்போன் எண்ணை அத்துமீறி எடுத்த நபர்.. தட்டிக்கேட்டு தாக்குதல் நடத்தியவர் கைது.!
Chennai Student attacked By someone and arrested
சென்னை அருகே திருவான்மியூர் பகுதியில் சேர்ந்த ஒரு 17 வயது மாணவர், கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு B.Tech படித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய நண்பருடன் ரயிலில் வந்துள்ளார்.
அப்பொழுது அதே ரயிலில் பயணித்த ஒரு பெண்ணை கைகாட்டி இவர் தன்னுடன் டியூஷனில் படித்தவர் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் நண்பர் திருவான்மியூர் மாணவரை கண்டித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கும் பொருட்டு திருவான்மியூர் மாணவர் பெண்ணின் செல்போனை எடுத்து தனது எண்ணிக்கை மிஸ்டு கால் கொடுத்துள்ளார். உடனே பதறிப் போன அந்த மாணவி தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நண்பர் திருவான்மியூர் மாணவரை செல்போனில் அழைத்து ஆதம்பாக்கத்திற்கு வரச் சொல்லி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உடைத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட திருவான்மியூர் மாணவர் போலீசில் புகார் கொடுக்க அவர்கள் அந்த பெண்ணின் நண்பரை கைது செய்தனர். இதில் தாக்குதலில் ஈடுபட்டவர் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது நபர் என்பது தெரியவந்துள்ளது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
English Summary
Chennai Student attacked By someone and arrested