போராட்டத்தில் மலர்ந்த காதல்.. 40 வருட பாசம்.. இறப்பிலும் இணைபிரியாத காதல் தம்பதி.! - Seithipunal
Seithipunal


போராட்டத்தில் மலர்ந்த காதல், முதுமை வரை தொடர்ந்து தம்பதிகள் இறப்பிலும் இணைபிரியாத சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் சிவன்கோவில் வீதி பகுதியை சார்ந்தவர் ராமமூர்த்தி (வயது 70). இவர் ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் ஆவார். இவரது மனைவி சரோஜினி (வயது 65). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

இந்நிலையில், இவர்களின் மகன் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துவிடவே, ஓய்வு பெற்ற பின்னர் ராமமூர்த்தி வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வந்துள்ளார். இதன்போது, தீப்பொறி கண்களில் பட்டு காயமடைந்த நிலையில், கண்பார்வை மங்கியுள்ளது. உடல்நலமும் குன்றவே, தனது கணவரை சரோஜினி கவனித்து வந்துள்ளார். 

இன்று அதிகாலை தீடீரென ராமமூர்த்திக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, சரோஜினி முதலுதவி செய்துள்ளார். மேலும், அருகில் உள்ள மருத்துவருக்கும் தகவல் தெறிக்கவே, வீட்டிற்கு விரைந்து வந்த மருத்துவர் ராமமூர்த்தியை பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து ராமமூர்த்தியின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, ராமமூர்த்தி இறந்த செய்தியை அறிந்த சரோஜினி பித்துப்பிடித்தார் போல கணவரின் இறப்பை ஏற்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடியவாறு இருந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கமடையவே, அங்கிருந்த மருத்துவர் அவரை சோதனை செய்கையில் அவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

அடுத்தடுத்து தம்பதிகள் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தம்பதிகள் குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், " தம்பதிகள் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். தங்களின் இளமை காலங்களில் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தின் மூலமாகவே இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. 

கடத்த 40 வருடங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவார்கள். நண்பர்களை போல மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். ராமமூர்த்திக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டபோது சரோஜினி அவரை நன்றாக கவனித்துக்கொண்டார். முதுமையிலும் அவர்களின் காதல் உறுதியாக இருந்த நிலையில், இறப்பிலும் இணைபிரியாத தம்பதியாக அவர்கள் இருந்துள்ளனர் " என்று தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Thondamuthur CPI Party Supporter Couple Passed away Love Married 40 Years ago


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->