படிகட்டில் தவறி விழுந்து மாணவி மரணமா? காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


படிக்கட்டில் இருந்த தவறி விழுந்த மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஷர்மா. இவரது மகள் ரோஷினி அந்த பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியின் முதல் நாள் என்பதால் ரோஷினி காலை 8 மணிக்கு கல்லூரிக்கு வந்து விட்டார். ஆனால், கல்லூரி வகுப்பறைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

படிக்கட்டின் அருகே ரோஷினி முகத்தில் காயங்களுடன் பற்கள் உடைந்து பலத்த காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்ததை கண்ட பேராசிரியை ஒருவர் கூச்சலிட்டு மற்றவர்களை அழைத்துள்ளார். உடனடியாக ரோஷினியை விட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தணர்.  சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College Student Death in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->