சில மாதங்களிலேயே கசந்த காதல், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட காதல் தம்பதி..!
Couple Committed Suicide
கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இவரும் அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த சவுந்தரராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்ப்ட்டது . இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவதன்று, இருவருக்கும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.