குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண் சாவு.. தீவிர விசாரணை..!
Death of a teenager after family planning surgery
குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை பின் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பூனையானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சூர்யா. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. இதனால், சூர்யா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, அவருக்கு கடந்த 24ம் தேதி பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சூர்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. உடனடியாக, அவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்த்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அறுவை சிகிச்சையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அதனை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இளம்பெண் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Death of a teenager after family planning surgery