திமுக ச.ம.உ.வேக்கு கொரோனா வைரஸ் உறுதி.. மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மீண்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், கொரோனா பரிசோதனைகளையும் தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகின்றனர். 

தற்போது தேர்தல் காலம் என்பதால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், பல வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வானகரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் கொரோனா பரவல் எடுக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Chennai Ambattur MLA Candidate Test Positive Corona Virus 31 March 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->