டிராக்டர் கவிழ்ந்தில் ஒட்டுநர் பரிதாப பலி, திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சோகம்..!
Driver Death in Thiruvannamalai
டிராக்டர் கவிழ்ந்து விழுந்து ஒட்டுநர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. டிராக்டர் ஒட்டுநராக இருந்த இவர் கொழப்பலூருக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மாட்டுவண்டி ஒன்று அவரது எதிர்புறம் வந்தது. இதனால், டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பழனி சம்பவ சம்பவ இடத்திலேயே பரிதாபமா உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Driver Death in Thiruvannamalai