மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பாஸ்?.. தமிழக அரசு அதிரடி செக்...!!
E Pass is Necessary for district and state travel in tamilnadu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அவசர தேவைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அனுமதி தேவை என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் அந்தந்த மாநிலங்களை பொறுத்து, இ-பாஸ் விதிமுறைகள் வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ளநிலையே தொடரும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி பெற வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும் " என்று தமிழக அரசு கூறியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
E Pass is Necessary for district and state travel in tamilnadu