காஞ்சிபுரம் || மின்கம்பத்தை சரிசெய்ய சென்ற மின் ஊழியருக்கு நேர்ந்த சோகம்..!
EB Man Death in Kanjipuram
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் உள்ள துணைமின் நிலையத்தில் வயர்மேனாக மோகன் ராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். அங்குள்ள டாஸ்மார்க் கடைக்கு அருகில் மின்கம்பத்தில் லாரி ஒன்று இடித்ததால் அங்கு மின்சாரம் தடைப்பட்டது. இதனை அடுத்து, மின் தடையை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருதார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
EB Man Death in Kanjipuram