சென்னை || கொட்டும் மழையிலும் பற்றி எரிந்த கார்..அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்..! - Seithipunal
Seithipunal


கொட்டும் மழையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங். இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது காரில் பூந்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காரை நிறுத்தி விட்டு இறங்கியுள்ளார். சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. கொட்டும் மழையிலும் கார் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accidnet in Car at chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->