அரசு  வேலை வாங்கி தருவதாக 29 பேரிடம் கைவரிசை: வெளியானது தம்பதியின் ஏமாற்று வேலைகள்! - Seithipunal
Seithipunal


ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருபவர்கள் செந்தில்குமார் மற்றும் அறிவழகி தம்பதி. இவர்கள் சுற்று கிராமங்களில் அரசு வேலைக்காக விண்ணப்பிக்க வருபவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்து ஒவ்வொருவரிடம் ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரிடம் இந்த தம்பதி ரூ. 1 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது. 

இதனை அடுத்து சங்கீதா காவல்துறையினர் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் அறிவழகி தம்பதியை கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 29 பேரிடம் ரூ. 1 கோடி வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 4லட்சம் ரொக்க பணம் மற்றும் 6 சவரன் நகையை பறிமுதல் செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government jobs offered cheating couple arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->