ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலை, மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்து கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பிபிபாளையம் பகுதியில் சடலம் ஒன்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, அங்கு விரைந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, அந்த பகுதியில் இருசக்கர வாகனமும் தலையில் காயப்பட்ட நிலையில், ஆண் சடலம் கிடந்தது.

அந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த சடலம் நரசிம்மன் என்பதும் தாரவேந்திரம் பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மரம்நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hosur Panchayat leader Killed


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->