நாகப்பட்டினம் || மகனை அடிப்பதை தடுக்க சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்..!
Husand Kills His Wife in Nagapattinam
மகனை அடிக்க விடுடாமல் தடுத்ததில் தாய் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருபூண்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரேவதி . இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர். மகளின் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ரேவதி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ரேவதி வீட்டிற்கு தாமதமாக வந்ததால் கால்நடைகளுக்கு தீனி போடவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் கால்நடைகளை பராமரிக்காத மகனை உருட்டுகட்டையால் அடிக்க பாய்ந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரேவதி தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரேவதி தலையில் பலமாக அடிப்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ரேவதியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husand Kills His Wife in Nagapattinam