ஜாதகத்துடன் பேனர் அடித்த மாப்பிள்ளையின் நண்பர்கள்.! விபரீதமான அளித்த பதில்.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமாக பேனர் வைக்கும் நிகழ்வு அதிகரித்துவிட்டது. பேனர் வைக்க அரசு தடை விதித்த போதிலும் அனைத்து நிகழ்விலும் பேனர் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் வைத்திருந்த பேனர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழே ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்களது புகைப்படம், ராசி, நட்சத்திரம், பெயர் அனைத்தையும் குறிப்பிட்டு, 'கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளை நாங்க' என்று பெண் தேடுவதைப் போல பேனரில் விளம்பரம் செய்துள்ளனர். 

இது குறித்து அந்த நண்பர்களிடம் பேசிய போது, "எங்களுக்கும் வீட்டில் பெண் பார்த்து பார்த்து சளைத்து விட்டனர். நல்ல பையனா என்று பார்க்காமல் வேலை இருக்கா, சொத்து இருக்கா, வீடு இருக்கா என்று 1008 கேள்விகளை கேட்டு நிராகரிக்கின்றனர். 

எனவே தான் இப்படி வித்தியாசமாக என் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளோம் .திருமண விழாவிற்கு வரும் யாருக்காவது இதில் ஒருவரை பிடித்திருந்தால் திருமணம் நடக்கும் என்ற நப்பாசையில் தான் இதை செய்தோம்." என்று அவர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jadhagam special banner in ramanadhapuram


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->