காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் இன்று நல்லடக்கம்.!!
Jayakumar body will be cremated today
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மாயமானதாக மகன் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய தேர்தல் வேட்டையில்ஸ பாதி எரிந்த நிலையில் கரைச்சுற்றுப்புத்தூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக எம்எல்ஏ ரூபி மனோகரன், கே.வி.தங்கபாலு பெயர்களை குறிப்பிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனால் அவரது உடலை வாங்க காங்கிரஸ் நிர்வாகிகளும் உறவினர்களும் மறுத்த நிலையில் அவர்களுடன் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வர்த்தையின் முடிவில் அவர்களது உடலை பெற்றுக் கொள்வதாக கூறியதை அடுத்து இன்று ஜெயக்குமாரின் உடல் காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
English Summary
Jayakumar body will be cremated today