கள்ளக்குறிச்சி: 13 வயது சிறுமி 15 வயது காமுகனால் கற்பழிப்பு.. நட்பூக்களிடம் பெருமை பேசி, காமுகன்களும் அத்துமீறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மாணவியை காதல் வலையில் வீழ்த்தி சீரழித்த காமுகன், அதனை தனது நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் மாணவியை கூட்டாக சேர்ந்து சீரழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்த பதைபதைப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் அருகேயுள்ள கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த அரசு பள்ளியில் 13 வயது மாணவி எட்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், இவரின் பெற்றோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். 

மாணவி தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்து பயின்று வந்த நிலையில், 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளான். இந்நிலையில், சம்பவத்தன்று உறவினர் வீட்டில் மாணவி தனியாக இருந்துள்ளார்.

இந்த விஷயத்தை எப்படியோ அறிந்துகொண்ட காமுக மாணவன், மாணவியின் இல்லத்திற்கு சென்று அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். 

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை, அவனுடன் பயின்று வரும் இரண்டு நட்பூக்களுக்கும் தெரிவிக்கவே, அந்த காமுக கொடூரன்களும் அவர்கள் வீட்டில் பெண் என்ற உறவில் அம்மா, தங்கை இல்லாததை போல மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் சென்று நீ குறித்த மாணவனுடன் வீட்டில் இருந்தது, அவன் உன்னை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் எங்களிடம் இருக்கிறது. எங்களின் ஆசைக்கு நீ இணங்காத பட்சத்தில், உனது விடியோவை பெற்றோருக்கும் அனுப்பிவிட்டு இணையத்தில் பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். 

இதனால் பயந்துபோன மாணவி செய்வதறியாது விழிபிதுங்கவே, காமுக மாணவர்கள் இருவரும் சேர்ந்து மாணவியை மிரட்டி அவரின் இல்லத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி வீட்டில் தனியாக இருக்கையில் மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதை கண்ட அக்கம் பக்கத்தினர், மாணவர்களிடம் வந்து விசாரிக்கையில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

பின்னர், மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்த போது அக்கம் பக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக உண்மை தெரியந்துள்ளது. மாணவி தனக்கு நடந்த கொடூரத்தை கண்ணீர் மல்க விவரித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 2 காமுக மாணவர்களை கைது செய்த நிலையில், காதல் வலை வீசி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காமுக மாணவனையும் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Tirunavalur Ulunthurpet 13 Aged girl Sexual abuse by 3 man gang Love and Threatening


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->