#Breaking: ஓணத்திற்கு உள்ளூர் விடுமுறை இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் பண்டிகை தான் ஓணம். வண்ண வண்ண கோலமிட்டு மக்கள் கொண்டாடுகின்ற இந்த ஓணம் பண்டிகை, கேரளாவில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். அத்துடன் கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த விழா பிரபலமானது. 

இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கோவை, சென்னை, நீலகிரி, திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஈரோடு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. 

அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வழக்கம் போல அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியரால் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram collector cancelled onam leave


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->