கரூர்: 21 வயது பெண்ணுடன் 18 வயது இளைஞன் காதல்.. தாலிகட்டி, விதிமுடிவை தேடிய ஜோடி.. காதலி உயிர் ஊசல்.!
Karur Love Couple Suicide boy Died girl Treatment in Hospital 15 Feb 2021
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் பலியாகி விட காதலி உயிருக்கு போராடி வரும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் அஜித். பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து வந்த நிலையில், மேல்படிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதன்போது அப்பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது.
சிவரஞ்சனி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் வருடம் பயின்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்த நிலையில், அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், பெண்ணிற்கு வயது அதிகமாக இருப்பதால் வயது வித்தியாசத்தை காண்பித்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவரஞ்சினிக்கு மற்றொரு இடத்தில் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் தங்களின் காதலை பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய காதல் ஜோடி, கரூர் மாவட்டம் கல்லுமடை கிராமத்துக்கு சென்று, அங்குள்ள அரசமரத்தான் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்ற காதல் ஜோடி, பழனியப்பன் என்பவரின் தோட்டத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று, விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.
வீரியம் மிக்க மருந்து குடித்த காதல் ஜோடியில் அஜித் அங்கேயே பலியாகியுள்ளார். சிவரஞ்சனி வாயில் நுரைதள்ளியவாறு உயிருக்கு போராடியுள்ளார். அப்பகுதியில் மாடு மேய்த்து வந்த ஒருவர், காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளியணை காவல் துறையினர், பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், உயிரிழந்த அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனையாகக அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் காதல் ஜோடியின் தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Karur Love Couple Suicide boy Died girl Treatment in Hospital 15 Feb 2021