மதுபோதையில் தெருநாய் என்றும் பாராமல் இளைஞர் செய்த செயல்.! போலீசார் வழக்கு பதிவு.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் ஒரு நபர் தெரு நாயை அடித்துக் கொன்றதால் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் வேலாண்டி பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வருகின்ற சமூக ஆர்வலர் லட்சுமி என்பவர், சாய்பாபா காலனியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். 

அதில், கார்த்திக் என்ற நபர் மதுபோதையில் வீதியில் படுத்திருந்த தெரு நாய் ஒன்றை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டதாக தெரிவித்து இருந்தார். 

இந்த புகாரின்பேரில், காவல்துறையினர், கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அத்துடன் லட்சுமி தெருநாய்களுக்கு உணவளிப்பதால், அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai men killed dog in drunken mind


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->