#மகாராஷ்டிரா || குழந்தை இல்லாத விரக்த்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


குழந்தை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாவட்டம் குல்ரா நகரம் குரேஷி நகர் பகுதியை சேர்ந்தவர் மஸ்ஹர் அலி அன்சாரி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார்.

அவரது உறவினர்கள் அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Male Committed Suicide in Maharastra


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->