செல்போன் கோபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம், காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


செல்போன் கோபுரத்தில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோடு, கூழங்கலச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகம் அருகில் உள்ள செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரத்தில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய படி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்புதுறையினர் உதவியுடன் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man body Founded in kanjipuram


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->