பாலியல் புகாரில் தந்தை கைது... விசாரணைக்கு அழைத்து சென்றதால் மகன் தற்கொலை? - Seithipunal
Seithipunal


பாலியல் புகாரில் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் மகனை விசாரணை அழைத்து சென்ற நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் , கீழே செவலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (63). இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவரது மகன் வெங்கடேஸ்வரை விசாரணைக்காக காவல்துறையினர் அவர்களது வாகனத்தில் ஏற்றி செய்ததாக கூறப்படுகிறது. சில மணி நேரங்கள் கழித்து அவர் வீட்டில் இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயலில் அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதனை கண்ட அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இருந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் அவர் விசாரணைக்கு அழைத்து சென்ற வழியிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறினர். 

வெங்கடேசனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man committed suicide in vizhuppuram


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->