அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மக்கள்நல பணியாளர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து மக்கள்நல பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தஒ ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், காம்பட்டு பல்ல தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் அங்குள்ள தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது, அந்த வயலில் வரப்பில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததை கணாமல் அதனை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Death in Electricity


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->