காதலித்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை.. திண்டுக்கலை கலக்கும் வித்தியாசமான பிளக்ஸ்..! - Seithipunal
Seithipunal


செய்திதாள் வடிவில் திருமண பிளக்ஸ் வைக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கோதைமங்கலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் சென்னையை சேர்ந்த வினிதா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுஇன்று திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நண்பர்கள் வைத்த பிளக்ஸ் அந்த பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

அப்படி என்னதான் அந்த பிளக்ஸில் இருந்தது என கேள்வி எழும்பும். செய்திதாள் வடிவிலான அந்த பிளக்ஸில் காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது என எழுதப்பட்டிருந்தது. மேலும், திருமணம் ஆகாமல் காத்திருக்கும் நண்பர்களின் புகைப்படங்கள், பயோடேட்டா விவரம் வெளியிடப்பட்டு மணமகள்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும்  வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage Poster in Dindugal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->