கட்சி தாவல் மன்னனின் அராஜகம்..! கொந்தளிப்பில் அதிமுக அதிமுக அமைச்சர்..!
Minister Thangamani Pressmeet about DMK Senthil Balaji Abuse Speech
ஆட்சிக்கு வராமலேயே வன்முறை செய்து வரும் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்துக்கு துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக ச.ம.உ செந்தில் பாலாஜி. இவரை கட்சித்தாவல் மன்னன் என்று தான் பெரும்பாலான அதிமுக அமைச்சார்கள் அடைமொழியோடு அழைத்து வருவார்கள்.
தற்போது தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குறுகிய காலத்தில் பல கட்சிகள் தாவி இறுதியில் திமுகவில் இணைந்து சீட் வாங்கி சட்டமன்ற உறுப்பினராக மாறிய செந்தில் பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், சட்டவிரோதமான செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு, திமுக ஆட்சி அமைந்ததும் மணல் வண்டிகளில் ஆற்றுக்கு மணல் எடுக்க சென்றால், அப்போது அதிகாரிகள் தடுத்தால் எனக்கு போன் போடுங்கள். அடுத்த கணமே அந்த அதிகாரி அங்கு இருக்கமாட்டார் என்று கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், ஆட்சியில் இல்லாமலேயே இந்த ஆட்டம். ஆட்சிக்கு தப்பி தவறி வந்தால் எப்படி இருக்கும் என்று மக்கள் எண்ணிப்பார்க்க தொடங்கியுள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் தங்கமணியும் திமுக ச.ம.உ செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்திருந்தார்.
இது தொடர்பான பேட்டியில், " திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியான வன்முறைகள், அராஜகம் நடக்கும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே இப்படியொரு அராஜகம் நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். மக்கள் திமுகவின் வன்முறைகளை புரிந்துகொண்ட செயல்பட வேண்டும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Minister Thangamani Pressmeet about DMK Senthil Balaji Abuse Speech