கன்னியாகுமரி || மதுபோதையில் வட மாநில தொழிலாளர் அடித்து கொலை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


வடமாநில தொழிலாளர்கள் மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சோபிதராஜ். சித்திரங்கோடு பகுதியில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் பல வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சோம்போ விஷ்வாஸ்(30), அனில் பர்மன் (22) ஆகிய இரண்டு பேரும் ஒரு அறையில் இருந்தனர்.

இந்நிலையில்,நேற்று இரவு 10 மணி அளவில் மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே அனில் பர்மன் ஜாக்கி கட்டையின் ராடை எடுத்து சோம்போ விஷ்வாசின் தலையில் அடித்துள்ளார். இதில், சோம்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அனில் பர்மனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North indian Worker Killed in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->