#Justin || அதிமுக ஒன்றுபட வேண்டும், சசிகலாவிற்கும் தினகரனுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்த பன்னீர்செல்வம்..!
O Pannerselvam invites Sasikala and Dinakaran To AIADMK
சசிகலாவும் தினகரனும் வந்தால் கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பவழங்கியது. இந்த தீர்ப்பில் பொதுக்குழுவின் முடிவுகள் செல்லாது என அறிவித்திருத்தது. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் ஆனது மற்றும் ஓ. பன்னீர்செல்லவத்தை கட்சியை விட்டு விலகி வைத்தது போன்ற முக்கிய முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். செய்தியாளர் கேட்ட பல்வேறு கேல்விகளுக்கு அவர் பதிலளித்து வரும் நிலையில், சசிகலாவும் , தினகரனும் வந்தால் கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த போது, அதிமுக ஒன்றுபட வேண்டும் அதனால், சின்னமாவும் தினகரனும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.
ஆதனை தொடர்ந்து எனக்கு எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், அவை தொலையட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
O Pannerselvam invites Sasikala and Dinakaran To AIADMK