கணவன் இறந்த துக்கத்தில் உயிரிழந்த மனைவி.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதிய தம்பதி..!
Old Couple Death in Mayiladuthurai
கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் குணச்சீலன் (74). இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த தம்பதி அவர்களின் பூர்வீக வீட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென குணசீலனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அவரது மனைவி தமிழரசி கணவர் மறைந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உறவினர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் நல்லடக்கம் செய்தனர். அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Old Couple Death in Mayiladuthurai