தொட்டபேட்டா மலை உச்சியில் இருந்து குதித்த மூதாட்டி.. 350 அடியில் இருந்து சடலமாக மீட்ட அவலம்..! - Seithipunal
Seithipunal


மலை சிகரத்தில் இருந்து கீழே குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரமானது தென் இந்தியாவின் மிக உயரமான சிகரமாகும். இந்த மலைக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவர். இந்நிலையில், அங்கு மலைசிரங்களை ரசித்து கொண்டிருந்த பெண் ஒருவர் தடுப்புகளை தாண்டி சென்று திடீரென கீழே குதித்துள்ளார்.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயணைப்புதுறையினர் உதவியுடன் 350 அடி பள்ளதாக்கில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் லீலாவதி என்பது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Lady Committed Suicide in Ooty


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->