#சென்னை - நள்ளிரவில் திடீர் சாலை மறியலால் பரபரப்பான தலைநகரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகரான சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதேபோன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் தலைநகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோயம்பேடு முதல் வில்லிவாக்கம் பாடி வரை 3 கிலோ மீட்டர் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் திருமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் ஆகாத பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People road block protest for drinking water in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->