கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இதனால், பள்ளி சேதமடைந்து இருக்கிறது.  இதுகுறித்து CBCID போலிஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், தற்போது இன்று இந்த பள்ளி மாணவர்களுக்கு வேறொரு இடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், அப்பள்ளி மாணவர்களின் சான்றிதழ்களை கலவரத்தின் போது எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு லட்சாதிபதி என்ற நபர் கைதாகியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested a Men who destroyed students certificate


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->