தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பூசாரி, நையப்புடைத்த உறவினர்கள்..!
Police Searching The priest who sexually abused a girl
தோஷம் கழிப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த பெண் தனது மகளுடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவிக்கு சுற்றி போட்ட அவர் அந்த சிறுமியின் தாயிடம் உங்கள் மகளுக்கு தோஷம் உள்ளது. அதை கழிக்க சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்காக எனது வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அப்படி செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என கூறியுள்ளார்.
அதனை உண்மை என நம்பிய அந்த தாயும் மகளுக்கு பரிகார பூஜை செய்ய ஒப்பு கொண்டார்.பூஜை செய்ய அழைத்து சென்ற அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் பூசாரியை அடித்து உதைத்தனர்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த பூசாரி மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றார். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
English Summary
Police Searching The priest who sexually abused a girl