நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் காதலி.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!
Police searching the young boy who betten his ex girlfriend
முன்னாள் காதலியை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். அஜின் என்ற இளைஞரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அஜின் அந்த மாணவி சென்றதாக கூறப்படுகிறது.
உறவினர் வீட்டில் தங்கி இருந்த அந்த பெண் தனது கல்லூரி நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய போது வீட்டிற்கு வந்த அஜின் அங்கிருந்து மரக்கட்டையால் அந்த மாணவியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவியை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் தலைமறைவாக உள்ள அஜினை தேடி வருகின்றனர்.
English Summary
Police searching the young boy who betten his ex girlfriend