பேச நிறைய உள்ளது.. அதற்கு முன் தொலைந்த சிண்ட்ரெல்லாவின் செருப்பை பெற்றுகொள்ளலாம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்..!
PTR Tweet about Yesterday
காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன் கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், நேற்றைய சம்பவம் பற்றி பேச நிறைய இருக்கிறது. ஆனால் , மதுரை விமானநிலையத்தில் காணாமல் போன்ற சிண்ட்ரெல்லா செருப்பை தனது பல்லாயிர கணக்கான கட்சி உறுப்பினர்களுடன் வந்து தொலைத்துள்ளார். அவருக்கு அவருடைய செருப்பை என்னுடையே ஊழியர்கள் பத்திரப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
English Summary
PTR Tweet about Yesterday