திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் - அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம் 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 

இதையடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த மாதம் 13-ந்தேதியும், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி 22-ந்தேதியும் நிறைவடைந்தன. இதுதவிர பதினொன்றாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி அரியர் மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதியுடனும், மற்ற மாணவர்களுக்கு 25-ந்தேதியுடனும் முடிவடைந்தது. 

இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதன்படி பன்னிரெண்டாம் வகுப்புக்கு வருகிற 6-ந்தேதியும், பத்தாம் வகுப்புக்கு 10-ந்தேதியும், பதினொன்றாம் வகுப்புக்கு 14-ந்தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. வழக்கம்போல் தேர்வு முடிவுகளை வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் செல்போன் மற்றும் இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public exam result update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->