பாவூர்சத்திரம் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?..!
Rahul Gandhi Election Campaign at Tenkasi Pavoorchatram 27 Feb 2021
இளைஞர்களின் நேரத்தை மோடி அப்பட்டமாக வீணடித்து வருகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது, மூன்றாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்பின்னர், தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது பேசிய ராகுல் காந்தி, " காமராஜர் இருக்கையில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் இருந்தது. இதனைப்போலவே தற்போதும் உள்ளது. வரும் தேர்தலில் வெற்றிபெற்று மக்களுக்கான அரசு அமையும். தமிழகம் மீண்டும் இந்தியாவிற்கு வழிகாட்டியாக செயல்படும்.
ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரலாறு என்று இந்தியாயவை மாற்ற முயற்சிப்பது தவறானது. மோடியின் ஒரேநாடு, ஒரே தேசம் திட்டம் தவறானது. இளைஞர்களின் நேரத்தை மோடி அப்பட்டமாக வீணடித்து வருகிறார் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rahul Gandhi Election Campaign at Tenkasi Pavoorchatram 27 Feb 2021