மாற்றுத்திறனாளி நண்பனை, ரூ.10 இலட்சத்திற்காக சதித்திட்டம் தீட்டி கொலை செய்த பயங்கரம்.!
Rajapalayam Native Person Murder by Friend at Chennai Guindy due to Money
சென்னையில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சார்ந்தவர் விக்னேஷ் (வயது 32). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் ஆகும். இவர் மாற்றுத்திறனாளியாக இருந்து வந்த நிலையில், எஞ்சினியரிங் படித்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தனியாக அறையெடுத்து தங்கி வந்த நிலையில், தென்காசி மாவட்டத்தை சார்ந்த ஆறுமுகசாமி (வயது 30) என்பவரும் இவருடன் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடைக்கு தேநீர் வாங்க ஆறுமுகசாமி சென்றுவிடவே, மீண்டும் வருகையில் விக்னேஷ் பிணமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, காவல் துறையினர் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் ஆறுமுகசாமியிடம் விசாரணை செய்ததில், மாற்றுதினாளியான விக்னேஷிற்கு இதய கோளாறு இருந்ததாகவும், பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஆனால், அவரின் பேச்சுக்களில் உண்மை இல்லை என்பதை உணர்ந்த காவல் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், விக்னேஷின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.10 இலட்சத்தை அபகரிக்க திட்டமிட்ட ஆறுமுகசாமி விக்னேஷை கொலை செய்தது உறுதியானது. இதய பிரச்சனை காரணமாக சமீபத்தில் விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த விஷயத்தை பயன்படுத்தியே விக்னேஷை கொலை செய்ய முடிவு செய்து, கொலைக்கு உதவி செய்ய சிவகாசியை சார்ந்த நண்பரான நாராயணனை சென்னைக்கு வரவழைத்த ஆறுமுகசாமி, விக்னேஷ் உறங்கிக்கொண்டு இருக்கும் போது தலையணையை வைத்து விக்னேஷின் தலையில் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதன்பின்னர் காவல் துறையினர் விசாரணையில் சிக்கிக்கொண்டதாகவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளான். இதனையடுத்து ஆறுமுகசாமியை கைது செய்த காவல் துறையினர், நாராயணனை பிடிக்க தனிப்படை சிவகாசி சென்றுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajapalayam Native Person Murder by Friend at Chennai Guindy due to Money