"3 ஆண்டுகளில் ரூ.780 கோடிக்கு" கடத்தல் - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.!!
Rs780 Crs worth smuggling in Chennai airport last 3years
இந்தியாவில் பரபரப்பாக காணப்படும் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். இங்கு கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறையினர் மற்றும் பிறவி விசாரணை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் 780 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் போதை பருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக நடப்பு ஆண்டில் 440 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோன்று கடந்த ஆண்டு 192 கோடி ரூபாய், 2021 ஆம் ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் துபாய், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கமும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்களும் கடத்திவரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rs780 Crs worth smuggling in Chennai airport last 3years