சவுக்கு சங்கர் மீது பாய்ந்த கஞ்சா வழக்கு.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


காவல்துறையில் உயர் அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் இழிவுபடுத்தி பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். 

அவர் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்ற போது காவல்துறை வாகனம் விபத்து ஏற்பட்டது அடுத்து சிகிச்சைக்க பின் நீதிபதி முன்னறிவிகள் ஆசைப்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் சவுக்கு சங்கரை சந்தித்த அவரது வழக்கறிஞர் சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதை வேளையில் தேனியில் வைத்து கைது செய்யப்பட்ட போது அவருடன் இருந்த நபர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சவுக்கு சங்கர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் தேதியில் கைது செய்யப்பட்ட பது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை போதை பருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளார். முன்னதாக கோவை சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் தாயாரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar appear in court in ganja case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->