#திருவண்ணாமலை || நிலத்தை அபகரிக்க முயன்றதால் தற்கொலைக்கு முயன்ற முதியவர்.. ஆட்சியர் அலுவகலகத்தில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


நிலத்தை அபகரிக்க முயன்றதால் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த முனியன் என்பவர் குறைதீர் கூட்டத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர் வைத்திருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தானிப்பாடியை சேர்ந்த 2 பேர் சேர்ந்த எனது நிலத்தையும், வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். இதனை அடுத்து, அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suicide attempt in Thiruvannamalai Collector office


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->